மதுரை, செப். 15 –
மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தின் செந்தமிழ் கல்லூரி வளாகத்தில் கவிஞர் பொற்கை பாண்டியன் எழுதிய ஆண்ட மண் எனும் நூல் அறிமுக விழா செந்தமிழ் கல்லூரி செயலர் மாரியப்பமுரளி தலைமையில் நடைபெற்றது.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் என். சேதுராமன் நூலை வெளியிட்டும், அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் மா. சரவணன் Ex.MLA பெற்றுக் கொண்டும் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்வில் மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் பதிவாளர் ராமகிருஷ்ணன், பி.வரதராஜன், கவிஞர்கள் ஈஸ்வர ராஜா, சுரேஷ் ராமலிங்கம், தங்க சாரா, பதிப்பாளர் சித்தார்த்த பாண்டியன் உள்பட பலர் உரையாற்றினர்.



