கிருஷ்ணகிரி,மே.20-
திருவண்ணாமலை கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை மத்தூர் போச்சம்பள்ளி செல்லும் வழியில் உள்ள மேம்பாலம் தற்போது பெய்த கன மழைக்கு மேம்பாலம் வழியாக செல்லும் ரோட்டில் அருகில் உள்ள கற்கள் சரிந்துள்ளது.இதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மேம்பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டி பணி முடிக்கப்பட்டு மேம்பாலம் வழியாக கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் கார் இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் இதன் வழியாக வந்து செல்கிறது. இந்தப் பாலம் ரோட்டில் அருகில் உள்ள கற்கள் சரிந்துள்ளதால் அதன் வழியாக செல்லும் பேருந்துகள் கனரக வாகன ஓட்டிகள் அச்சத்தில் செல்கின்றனர். இதன் வழியாகச் செல்லும் வாகனங்களை தடை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எந்த நேரத்திலும் சரியும் அபாய நிலையில் உள்ளது. விபத்துக்கள் ஏற்படும் முன்பு இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேம்பாலம் ரோட்டில் அருகில் உள்ள கற்கள் சரிந்துள்ளது

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics