மார்த்தாண்டம், பிப்- 19
மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியை சேர்ந்தவர் அனீஸ் (29) கொத்தனார். அதே பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (29) சென்ட்ரிங் தொழிலாளி. இருவரும் நண்பர்கள். இதில் பிரதீப் குடி போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
நேற்று இரவு இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது மது குடிக்க பணம் வேண்டும் என பிரதீப் கேட்டுள்ளார். அப்போது பணம் இல்லை என அனிஷ் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரதிப் தனது பையில் இருந்த சுத்தியலை எடுத்து அனிஷ் முதுகில் ஒங்கி அடித்தார்.
மேலும் கீழே கிடந்த பாட்டிலை எடுத்து கடுமையாக தாக்கினாராம். இதில் படுகாயம் அடைந்த அனி ஷை உடனடியாக மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் பிரதீப் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.