மானாமதுரை: பிப்:16
சிவகங்கை மாவட்டம்
மானாமதுரை
சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கல்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளின் நலன் கருதி சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி இரவிக்குமார் ரூ. 70 லட்சம் மதிப்பீட்டில் புதிய கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியின் போது மானாமதுரை கிழக்கு ஒன்றியக்கழகச் செயலாளர் முன்னாள் பேரூராட்சித் தலைவர் துரை.ராஜாமணி, தொகுதி தலைமைக்கழக பார்வையாளர் கே. ஆர். என். போஸ், முன்னாள் கவுன்சிலர் ராதா சிவசந்திரன், அறங்காவலர் பால்பாண்டி, கல்குறிச்சி கிளைக்கழக செயலாளர் சிவசந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவியர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.