தேனி மாவட்டம், மே- 18
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட ஆனைமலையான்பட்டியில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதி ஆண்டு இளங்கலை மாணவி ஸ்ரீதேவி பே 3 ஜி கரைசலின் செய்முறை மற்றும் பயன்பாட்டை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார் இந்நிகழ்வு ஆனைமலையான்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது மேலும் இதில் ஊர் தலைவர் மீனா மூர்த்தி கலந்துக்கொண்டு சிறப்பித்தார் 3 ஜி கரைசல் என்பது இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் மற்றும் கோமியம் கொண்டு தயாரிக்கப்படுகிறது
இதை இயற்கை பூச்சிக்கொல்லி மருந்தாக பயன்படும் இது சாருஞ்சும் பூச்சிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது இதனால் இரசாயன பூச்சிக்கொல்லி உபயோகம் குறைந்து மண் வளம் மேம்படும் என மாணவி செயல் விளக்கத்துடன் பொதுமக்களுக்கு புரியும் படி எளிய முறையில் கூறினார் இந்நிகழ்வுக்கு விவசாயிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்