தஞ்சாவூர் ஜன.21.
தஞ்சாவூர் மாவட்டம் பிரசித்தி பெற்ற அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் பிப்ரவரி 10ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றான புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. தஞ்சாவூரை ஆண்ட சோழப்பேரர சர்கள் தஞ்சாவூரை சுற்றிலும் 8 திசைகளில் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்த னர் .அவ்வாறு தஞ்சாவூர் கிழக்கு புறத்தில் அமையப்பெற்ற சக்தியே அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன் ஆகும்.பொதுவாக கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்க நடத்தப்பட வேண்டும் .புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது.
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் பிப்ரவரி 10ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது .இதையொட்டி திருப்பணி கள் கலந்த ஓராண்டாக நடைபெற் று வருகிறது.
இந்நிலையில் விழா பிப்ரவரி 3ஆம் தேதி காலை 7. 25 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது
பின்னர் பிப்ரவரி 7ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் முதல் காலயாக பூஜை யும், தொடர்ந்து 6 கால யாக பூஜை நடைபெறுகின்றன. பிப்ரவரி 10ஆம் தேதி காலை 9 10 மணிக்கு யாக சாலையில் இருந்து மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கலசங்கள் புறப்படும் காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் குடமுழுக்கும் நடைபெறவுள்ளது.
இதற்காக யாகசாலைகள் அமைக்கும்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் தலைவர் பிரியங்கா பங்கஜம் நேரில் ஆய்வு செய்தார் அப்போது அரண்மனை தேவஸ் தான உதவி ஆணையர் கவிதா கோவில் செயல் அலுவலர் மணிகண்டன்,துணை தாசில்தார் நல்ல தம்பி, வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் நெடுஞ்சாலை துறை ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.