களியக்காவிளை, ஜன,20 –
குமரிமாவட்டத்தில் சின்மய மிஷன் ஆஸ்ரமம் குமார கோயில் அருகே செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்ரமத்தில் சிவ பரிவார் மற்றும் தம்பதி சமேத நவக்கிரக சன்னதி உள்ளது. இதன் 9-வது வருஷாபிஷேக விழா நடந்தது. விழாவில் காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ருத்திர ஹோமம், ருத்திர அபிஷேகம், நடந்தது. மாலை சின்மய பால விஹார் மாணவ மாணவிகளின் பக்தி பஜனை நடந்தது. நிகழ்ச்சியினை கோயம்புத்தூர் சின்மய மிஷன் பிரம்மச்சாரி விக்னேஷ் சைதன்யா, நாகர்கோவில் மாதா அமிர்தானந்த மயி மடத்தின் பிரம்மச்சாரி நீலகண்ட சைதன்யா உள்ளிட்டோர் நடத்தினர். வெள்ளிமலை விவேகானந்த ஆஸ்ரம தலைவர் சுவாமி சைதன்யானந்த மகராஜ் பேசினார். சுவாமி நிஜானந்தா நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை ஆஸ்ரம நிர்வாகிகள் செய்திருந்தனர்.