தஞ்சாவூர். ஜன.18.
கும்பகோணம் கல்வி மாவட்ட அளவில் சிறிய மலர் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, மெட்ரிக், சி டி எஸ் பள்ளிகளை சேர்ந்த ஜே.ஆர்.சி கவுன்சிலருக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
ஜே ஆர் சி கொடியினை சிறிய மலர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அமர் சிங் எலியேசர்ஏற்றினார்.நிறுவனர் படத்தை கும்பகோணம் ரெட் கிராஸ் உடை கிளையின் துணை சேர்மன் ஆண்ட்ரூ ரொசாரியோ திறந்து வைத்தார்.
முகாமில் ஜே ஆர் சி பாடல் பயிற்சி வரலாறு சாலைப்போக்கு ஒருத்தி விதிமுறைகள் போன்ற தலைப்புக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
நிறைவு விழாவில் கும்பகோணம் கல்வி மாவட்ட அலுவலர் (இடைநிலை) இரா. சுந்தர், தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) வை. சாரதி,மாவட்ட கல்வி அலுவலர் தொடக்கப்பள்ளி அய்யாகண்ணுஆகியோர் முன்னிலை வகித்து பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்கள்.
முன்னாள் மாவட்ட ஜே ஆர் சி கன்வினர் நல்லாசிரியர் கோபாலகிருஷ்ணன் தஞ்சை மாவட்ட ரெட் கிராஸ் பொருளாளர் நாசர்,ஒய் ஆர் சி ஆலோசகர் ஜெயக்குமார் ஜே.ஆர்.சி ஆலோசகர் பிரகதீஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்
முன்னதாக கல்வி மாவட்ட கன்வினர் ஸ்டீபன் அனைவரையும் வரவேற்றார்.இணை கன்வினர் கார்த்திகேயன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்வி மாவட்ட பொருளாளர் மணிகண்டன் இணை கன்வினர் செல்வமணி ஆறுமுகம் சிறியமலர் மேல்நிலைப் பள்ளி ஜே ஆர் சி கவுன்சிலர் லூதர் அமல்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்