தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 2- வார்டு கிளைச் செயலாளர் என். சி. குணசேகரன் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 108 -வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவரது திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் வேடியப்பன், சந்திரபாபு மற்றும் வார்டு பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.



