தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை முதலே சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், வழிபாடுகள் நடைபெற்றது.பின்னர் ஆருத்ரா தரிசன காட்சியும், சாமிக்கு மகா தீபாரதனையும் நடைபெற்றது .இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு திருவாதிரைகளி சிறப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது. தருமபுரி நகரில் பிரசித்தி பெற்ற கடை வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருத வாணேஸ்வரர் கோயில், கோட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜுனேஸ்வர் கோயில், குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவில், நெசவாளர் காலனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோயில் ஆகிய கோவில்களில் ஆருத்ரா விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து சாமி திருவீதி உலா நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசன விழா

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics