[4:11 pm, 12/1/2025] +91 99944 66200: கன்னியாகுமரி ஜன 13
கன்னியாகுமரி கடல் நடுவே ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்ட கண்ணாடி இழை பாலத்தை கடந்த 30-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.பாலம் திறக்கப்பட்ட பின் 3 நாட்களாக சூறைக் காற்று வீசியதால் சுற்றுலா பயணிகள் படகில் கண்ணாடி பாலத்தை சென்று பார்க்க முடியாமல் சிரமம் அடைந்தனர். கடந்த சில நாட்களாக விவேகானந்தர் பாறைக்கு படகு மூலம் சென்று அங்கிருந்து கண்ணாடி இழை பாலத்தில் நடந்து சென்றவாறு திருவள்ளுவர் சிலையை சுற்றுலாப் பயணிகள் பார்த்த மகிழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், கண்ணாடி இழை பாலத்தில் நேற்று முதல் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் முதல் கட்டமாக 3 நாட்களுக்கு கண்ணாடி இழை பாலத்தில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடியாவிட்டால் மேலும் சில நாட்கள் தடை தொடர வாய்ப்புள்ளதாக நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.தற்போது பொங்கல் தொடர் விடுமுறை வருவதால் தடை நீடித்தால் சுற்றுலா பயணிகள் கண்ணாடி இழை பாலத்தில் செல்ல முடியாமல், விவேகானந்தர் நினைவு பாறைக்கு மட்டுமே சென்று வரமுடியும். சுற்றுலா பணிகள் மறு உத்தரவு வந்த பின்னரே கண்ணாடி இழை பால்தில் செல்ல அனுமதிக்கப்படுவர். கண்ணாடி இழை பாலம் திறந்து சில நாட்களிலே சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பண்டிகை கால சீசன் நேரத்தில் கன்னியாகுமரி வருவோருக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
[4:12 pm, 12/1/2025] +91 99944 66200: களியக்காவிளையில் சாலையில் காரை நிறுத்தி மிரட்டிய நபர்
களியக்காவிளை, .ஜன- 13
களியக்காவிளை அருகே பிலாவிளை என்ற பகுதியில் நேற்று மாலையில் காரில் வந்து கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென சாலையில் காரை நிறுத்தினார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை சிலர் தட்டிக் கேட்டனர். ஆனால் காரில் வந்த நபர் அந்த வழியாக சென்ற பொது மக்களை வம்பிழுத்து ரகளையில் ஈடுபட்டார். மேலும் தான் வைத்திருந்த கத்தியை காட்டி அருகில் வந்தால் கொன்று விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து களியக்காவிளை தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு செல்வதற்குள் அந்த நபர் அவரது காரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டார். போலீசார்ந்த காருக்குள் சோதனை செய்தபோது காரில் எந்தவித ஆவணங்களும் இல்லை.
இதை அடுத்து காரை பறிமுதல் செய்து களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். விசாரணையில் இந்த காரின் உரிமையாளரும் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டவருமான விஜயலால் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்