சுசீந்திரம்.ஜன.12
சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவிலில் கடந்த 4ம் தேதி காலை 8 மணி அளவில் மார்கழி திருவிழாவிற்காக கொடி ஏற்றத்துடன் துவங்கியது 3ம்நாள் திருவிழாவில் இரவு 11:30 மணி அளவில் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும் 5ம் திருவிழா அன்று காலை 6 மணிக்கு கருட தரிசனமும் 7ம் திருவிழாவான நேற்று இரவு 8.45 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவிதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது 9ம் திருவிழாவான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது அதனை முன்னிட்டு காலை 4 மணிக்கு கங்காள நாதர் பிச்சாடனராக திருவீதியுலா வரும் நிகழ்ச்சியும் காலை 7 45 மணிக்கு விநாயகர் தேர் அம்மன் தேர் சுவாமி தேர் அலங்கரிக்கப்பட்டு விநாயகர் தேரில் விநாயகரும் சுவாமி தேரில் சுவாமியும் அம்பாளும் அம்மன் தேரில் அம்பாளும் அமரச் செய்து தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது அம்பாள் தேரை பெண்கள் இழுத்து வர ரத விதியை ஒருமுறை பக்தர்கள் வடம்தொட்டுஇழுக்கும்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது இரவு 8 மணிக்கு சுவாமி தந்த பல்லுக்கு எழுந்தருளள்நிகழ்ச்சியும் கலை நிகழ்ச்சிகளும் இரவு 12 மணிக்கு தனது தாய் தந்தையர்கள் விழாவில் பங்கெடுத்துக் கொள்வதற்காக வந்த கோட்டாறு வலம்புரி விநாயகர் மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி வேளிமலை முருகர் சுவாமி ஆகியோர் தனது தாய் தந்தைகளை மூன்று முறை வலம் வந்து பிரிந்து செல்லும் சப்தவர்னநிகழ்ச்சி நடைபெறுகிறது 10ம் திருவிழாவான நாளை காலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் மாலை 5 மணிக்கு நடராஜமூர்த்தி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் இரவு 9 மணிக்கு திரு ஆறட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது விழா ஏற்பாடுகளை கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி அறங்காவல் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் அறங்காவல் குழு உறுப்பினர்கள் கோவில் கண்காணிப்பாளர் ஆனந்த் மேலாளர் ஆறுமுகததரன் கணக்கர் கண்ணன் தாணுமாலயசுவாமி பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்