தஞ்சாவூர் மார்ச்.28.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர் தமிழ்வாணன் மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் வன்கொடு மை வழக்குகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர் தமிழ்வாணன் கள ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வன்கொடுமைகளை பொறுத்த வரையில் மற்ற மாவட்டங்களை விட தஞ்சாவூர் மாவட்டத்தில் குற்றச்சாட்டு அதிகமாக இல்லை தஞ்சாவூர் மாவட்டத்தில் மற்ற பகுதி களை விட ஒரத்தநாடு பகுதி யில் வன்கொடுமை கூடுதலாக இருப்பது ஆய்வில் தெரிய வருகிறது .இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரும், காவல்துறை கண்காணிப்பாளர் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
வன்கொடுமை வழக்குகளில் தீவிரமாக ஆராய்ந்தால் தான் உண்மை நிலை தெரிய வரும். சில வழக்குகள் அரசு அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு வராமல் அவர்களுக்குள்ளே முடித்துக் கொள்ளப்படுகிறது. எனவே வன்கொடுமைகள் வெளியில் தெரியாமல் உள்ளுக்குள்ளேயே நிகழ்கின்றன .அதை அரசு அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும்.
மாவட்ட அளவிலான கண்காணி ப்பு குழுவின் நடவடிக்கைகளை இன்னும் முழு பேச்சை செயல் படுத்த வேண்டும் .இக்கூட்டத்தில் ரூபாய் 3.52 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கப் பட்டுள்ளன என்றார் தமிழ்வாணன்
முன்னதாக கூட்டத்தில் அவர் பேசுகையில் ஜாதி வன்கொடுமை வழக்குகளில் அதிகாரிகள் கட்டப் பஞ்சாயத்து செய்து முடிக்காமல், சட்டப்படி செயல்பட வேண்டும் இந்த வழக்குகளில் கட்டப்பஞ்சாய த்து செய்வது சட்டப்படி குற்றம்
ஆணையத்திலிருந்து அனுப்பப் படும் மனுக்களுக்கு பதில் அறிக்கை தாக்கல் தாமதமாக வருகிறது. இதைக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் அனுப்ப அலுவலர் கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் தூய்மை பணியாளர்களுக்கு கையுறை, முக கவசம் அவசியம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவும் மனித உரிமைக்கு எதிரான செயலாகும் என்றார் தமிழ்வாணன்
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் ஆணையத்தின் துணைத் தலைவர் எழுத்தாளர் இமயம், ஆணை உறுப்பினர் ஆனதராஜ், இளஞ் செழியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், தாட்கோ மேலாளர் தியாகராஜன் மாநகராட்சி ஆணையர் கண்ணன் கும்பகோணம் உதவி மாவட்ட ஆட்சியர் ஹிருத்யா விஜயன் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன்,வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்



