சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் வேலை வாய்ப்பு பயிற்சி மற்றும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமும் வேலைவாய்ப்பு மையமும் இணைந்து நடத்திய இக்கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் கருப்பசாமி தலைமை வகித்தார். நாட்டு நல பணி திட்ட அலுவலர் கணபதி வாழ்த்துரை வழங்கினார். கோயம்புத்தூரில் உள்ள கல்வி நிறுவனமான கே.வி. இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் இன்பர்மேஷன் சார்பில் நிரோஜினி, ராஜா, எம்.எஸ். எம். ஸ்வர்ணமதி, ஜனனி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.
முன்னதாக இந்நிகழ்விற்கு வந்திருந்தவர்களை நாட்டு நல பணி திட்ட அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். கல்லூரியின் வேலைவாய்ப்பு மைய அலுவலர் முருகேசன் நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.