தஞ்சாவூர், ஜன.4.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மாபேட்டை பாபநாசம் திருவிடைமருதூர் திருப்பனந்தாள் ஒன்றியங்களில் ரூபாய் 4.26கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு கட்டிடங்களை உயர்கல்வி துறை அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்தார்
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார் கல்யாணசுந்தரம் எம்பி, முன்னாள் எம்பி இராமலிங்கம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கலந்து கொண்டு அரசு சார்பில் கட்டப்பட்ட ரூபாய் 4 கோடியே 26 லட்சம் மதிப்பிலான பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
. தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சார்பில் கட்டப்பட்ட கட்டிடங்கள் திறக்கப் பட்டுள்ளன மொத்தம் ஒரு ரூபாய் 4 கோடி 26 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பிலான கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. கிராமப் புறங்களில் மேம்பாடு பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு திட்டங்களை விரைந்து செயல்படுத்தி உள்ளது.
மேலும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் ரூபாய் 1000 ,உயர்கல்வி பெறுகின்ற பெண்களுக்கு மாதம் ரூபாய் 1000, தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ரூபாய் 1,000போன்ற திட்டங்களும் மக்களை தேடி மருத்துவம், உங்களைத் தேடி உங்கள் ஊரில் போன்ற திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அமைச்சர் கோவி செழியன் அம்மாபேட்டை ஒன்றியம் கோவத்தக்குடி ஊராட்சியில் மாபெரும் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் உதவி ஆட்சியர் ஹிருத்யா விஜயன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் ஒன்றிய குழு தலைவர் கலைச்செல்வன் (அம்மாபேட்டை) சுமதி கண்ணதாசன் (பாபநாசம்) சுபா திருநாவுக்கரசு (திருவிடைமருதூர்) தேவி ரவிச்சந்திரன் (திருபனந்தாள்) துணைத்தலைவர் அண்ணாதுரை மற்றும் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.