திருச்சி, மே 26 –
திருச்சியில் சனாதனத்தை ஒழிக்க வலியுறுத்தி மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அதே சமயம், சனாதனத்துக்கு ஆதரவாக இந்து முன்னணி கட்சியினர் கோஷம் எழுப்பினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு குச்சி, காலாணி, வாட்டர் பாட்டிலால் தாக்கிக் கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர்.



