தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சந்திர நாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர் .சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் தமிழ்நாடு அரசின் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தினமும் 100 நபர்களுக்கு அன்னதானம் திட்டம் செயல்படுத்தி வந்த நிலையில் சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலைத்துறை மானிய கோரிக்கையின் போது பேசிய ராஜா எம்எல்ஏ சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். எனவே அன்னதான திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு அரசு 150 நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் 150 நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சிக்கு கோவில் துணை ஆணையர் கோமதி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு அன்னதானத் திட்டத்தை துவக்கி வைத்தார் .இதில் ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, சேர்மத்துரை,
நகர செயலாளர் பிரகாஷ், கோயில் இன்ஜினியர் முத்துராஜ், திமுக மாவட்ட மாணவரணி செயலாளர் உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவில் விரிவாக்கப்பட்ட அன்னதானத் திட்டத்தைராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்



