தஞ்சாவூர் மே 13
தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணித்துறை மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணை ந்து கோடைகால தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம் மீனாட்சி மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. முகாமிற்கு மாவட்ட தீயணைப்பு பணித்துறை தலைவர் குமார் தலைமை தாங்கி,தீ தடுப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார் மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் முருகேசன் மற்றும் குழுவினர்களால் மருத்துவமனை பணியாளர்களுக்கு தீ தடுப்பு குறித்தும், தீயணைப்பான்களை கையாள்வது குறித்தும் ,சமையல் எரிவாயு தீ தடுப்பு குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தனர்
இதில் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் சரவண வேல், மருத்துவமனை பொது மேலாளர் டாக்டர் பாலமுருகன், மனிதவள மேம்பாட்டு துறை மேலாளர் செல்வ பாண்டி மற்றும் டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் என 300 க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்



