தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் தென்காசி மாவட்ட அனைத்து வங்கி கிளைகளின் மூலம் கல்விக்கடன் வழங்கும் முகாம் மற்றும் தொழில் முனைவோருக்கு கடன் உதவி வழங்கும் முகாம் மாவட்டஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தலைமையில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீ குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன்திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ் செல்வி போஸ், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், வங்கி மேலாளர்கள், ஊழியர்கள் , அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.



