By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேவர்குளம் காவல் நிலையத்தில் நடந்து வரும் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேவர்குளம் காவல் நிலையத்தில் நடந்து வரும் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்
மாவட்டம்

தேவர்குளம் காவல் நிலையத்தில் நடந்து வரும் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்

Last updated: May 12, 2024 10:43 am
May 12, 2024
130 Views
Share
SHARE

சங்கரன்கோவில். மே.12

 

தேவகுளம் தேவர்குளம் காவல் நிலையத்தில் நடந்து வரும் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென நெல்லை எஸ் பி சிலம்பரசனிடம் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு அளித்தார் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு முதல்வராக  ஸ்டாலின் பொறுப்பேற்றதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் காவல்துறை மிகவும் கண்ணியமான முறையில் பொதுமக்களிடம் உறவு வைத்துள்ளது, இந்த சிறப்பான நடவடிக்கைகளின் மூலமாக மக்களிடையே காவல்துறைக்கு மிகவும் சிறந்த பெயர் உள்ளது என்பதும் அனைவரும் அறிந்தது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மிகவும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று அகில இந்திய அளவில் தமிழ்நாடு காவல்துறை மிகவும் உயர்ந்த பெயரை தாங்கி வருகிறது. இந்த சூழ்நிலையில் கடந்த சில மாதமாக தேவர்குளம் காவல் நிலையத்தில் சில காவல்துறை அதிகாரிகளால் அப்பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.குறிப்பாக காவல் நிலையத்திற்கு வருகின்ற அரசியல்வாதிகள், சமூக நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை குறைவாக நடத்தப்படுகிறார்கள் என தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. மேலும் சிலர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த சூழ்நிலையில் கடந்த மே 8 ஆம் தேதி அன்று வன்னிக்கோனந்தலில் சில அமைப்புகள் சார்பாக தேவர்குளம் காவல் நிலைய அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த சாலை மறியல் போராட்டத்தை அமைதியான சூழ்நிலையில் பேச்சுவார்த்தை மூலம் சுமுக முடிவுக்கு கொண்டு வராமல், வன்மத்தோடு பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் வள்ளிநாயகம் அவர்கள் உள்ளிட்ட 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மே 9 ஆம் தேதி இந்த சம்பவத்தை கண்டித்து மானூர், தேவர்குளம், வன்னிக்கோனந்தல், பணவடலிசத்திரம், குருக்கள் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் முழுக்கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. எனவே சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலநீலிதநல்லூர் ஒன்றிய பகுதிகளில் இந்த தொடர் தேவர்குளம் காவல் நிலைய பிரச்சினைகளால் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் பொதுமக்கள் மத்தியில் தேவர்குளம் காவல் நிலையத்தை பற்றி தவறான எண்ணங்கள் பதிவாகி வருகிறது.எனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களை, விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தொடர்ந்து இப்பகுதி வியாபாரிகளுக்கும்,பொது மக்களுக்கும், காவல்துறை மேல் முழு நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு, தேவர்குளம் காவல் நிலைய அதிகாரிகள் மேல் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தற்காலிகமாக முதலில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை பணி இட மாற்றம் செய்து, மக்களிடம் நல்ல அணுகுமுறை கொண்ட சிறப்பாக பணி செய்யும் காவல் அதிகாரிகளை பணி அமர்த்தி இப்பகுதியில் அமைதியான நிலை உருவாக்கி, தொடர்ந்து சுமூக நிலை ஏற்படுத்த வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சந்திப்பின்போது மதிமுக துணை பொதுச்செயலாளர் தி மு ராஜேந்திரன் மதிமுக  சுதா பரமசிவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இசக்கித்துரை, அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் கருப்பசாமி பாண்டியன் பார்வர்ட் பிளாக் கட்சி  சுப்பிரமணியன், ஆதித்தமிழர் பேரவை தென்னரசு, ஆதித்தமிழர் கட்சி ஆதவன்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி லிங்கவளவன், புலித்தேவன் மக்கள் கழகம் பெருமாள்சாமி , திமுக மாவட்ட பொருளாளர் சரவணன்,ஒன்றிய செயலாளர்கள்  திமுக பெரியதுரை ,பால்ராஜ், அன்பழகன், மதிமுக வேல்சாமி,சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், வீமராஜ், பசுபதி பாண்டியன் ,ஜெயக்குமார், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்

விளம்பரம்

You Might Also Like

ஆளூர் சாலையில் திறந்தவெளியில் உணவு, இறைச்சி உள்ளிட்ட கழிவுகளைக் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
தருமபுரியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி
1167 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
கன்னியாகுமரி மாவட்டம் குழு சார்பாக இரங்கல் கூட்டம்
கலைஞரின் 6 ஆண்டு நினைவு நாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஈரோடு மாணவர்கள் 11 பேர் தங்கம் வெள்ளி பதக்கம் பெற்று சாதனை

June 13, 2024
119 Views
ரூ.3.15 கோடி நலத்திட்ட உதவிகள்
புட்டுத் திருவிழாவிற்கு மதுரை வந்தார் முருகப்பெருமான்
பெண்கள் தங்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தைரியமாக முன்வந்து புகார் தெரிவிக்க வேண்டும்- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பேச்சு
ராமநாதபுரம் தெற்கு நகர் திமுக இளைஞரணி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account