மதுரை கே.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தமிழியக்கம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கான கலைத்திறன் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா தியாகராசர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
இவ்விழாவில்
அரிமா பழனிச்சாமி
செயலாளர்
தலைமை தாங்கினார். தமிழியக்கம் மதுரை மாவட்ட பொருளாளர் மாரியப்பன் வரவேற்புரை ஆற்றினார். தியாகராசர் கல்லூரி செயலர் ஹரி தியாகராசன், மதுரை மாநகர் காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன். அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் முகமது இதிரிஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று நடைபெற்ற இந்த போட்டிகளில் ஜெயிக்கப் போவது நீதான் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி, இதர தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி, லூர்து அன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாலமந்திரம் மேல்நிலைப்பள்ளி மற்றும் M.L.W.A மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.
இந்த விழாவில் நகைச்சுவை நாவரசு முனைவர் சண்முக திருக்குமரன். தமிழியக்க மதுரை மண்டல செயலாளர் கார்த்திகேயன், மண்டல ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் மதுரை நகைச்சுவை மன்ற அமைப்புச் செயலாளர் பாண்டியராசன், நல்லாசிரியர் மகேந்திரபாபு, இலக்கிய செல்வி பூஜிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து
தமிழியக்க மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷேக்நபி நன்றியுரை ஆற்றினார். தமிழியக்க மதுரை மாநகர செயலாளர் காளிமுத்து, கல்யாணசுந்தரம், குமாரசாமி, அபுதாகீர், ரகமத்துல்லா, அக்ரி ஆறுமுகம், குமரன், சுப்பிரமணியன், தமிழ் ஆர்வலர் ஆதித்தா, சுலைகாபானு, இந்திரா, “அகஸ்தியர் ஹெர்பல்” நாகலிங்கம் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.