திருப்பத்தூர்:டிச:5, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் வங்கதேசம் சம்பவம் தொடர்பாக இந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என RSS, பா.ஜ.க, இந்து முன்னணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கதேசத்தில் கடந்த ஜூலை
மாதத்தில் உள்நாட்டு குழப்பம் வந்தபோது ஷேக் ஹசீனா தலைமைலான ஜனநாயக அரசு அகற்றப்பட்டு யூனூஸ் தலைமையிலான தற்காலிக அரசு அமைக்கப்பட்டது.
யூனூஸ் தலைமையில் ஆட்சி அமைந்தது முதலே அங்கு ஹிந்துக்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஹிந்து பெண்களை மானபங்கப்படுத்துதல், ஹிந்து வழிபாட்டு தலங்களை இடித்தல், கோயில்களில் வளர்க்கப்படும் பசுக்களை கொடூரமாக அடித்து கொல்லுதல், ஹிந்துக்களை அரசு பணியில் இருந்து மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தல் போன்ற மனித தன்மையற்ற நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன. மொத்தம் 49 மாவட்டங்களில் ஹிந்துக்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் ஆயிரத்து 500 ஹிந்து ஆசிரியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. இதை யூனூஸ் தலைமையிலான தற்காலிக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது மட்டுமல்லாமல், மறைமுக ஆதரவும் அளித்து வருகிறது. பாதிக்கப்பட்ட ஹிந்துக்கள் பாரத நாட்டின் எல்லையை நோக்கி அடைக்கலமாக வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் அங்கே ஹிந்துக்களின் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை வழி நடத்திய இஸ்கான் அமைப்பின் துறவி சின்மயி கிருஷ்ணதாஸ் பிரபு அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே சின்மயி கிருஷ்ணதாஸ் பிரபு வங்கதேசத்தில் பல சேவைப்பணிகளை முன்னின்று நடத்தியவர்.
ஆனால் இப்போது வன்முறைக்கு எதிராக குரல் கொடுத்ததால் அவரை கைது செய்தது மட்டுமல்லாமல், இஸ்கான் அமைப்பை மிரட்டி அவரை வெளியேற்றியுள்ளனர். அது முதல் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் வங்கதேசத்தில் தீவிரமடைந்துள்ளது.
தொப்புள்கொடி ஹிந்துக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது கவலை அளிக்கிறது. இந்த மனிதநேயமற்ற வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும், இந்த விஷயத்தில் பாரத அரசு உடனடியாக தலையிட்டு உலக அரங்கில் வங்கதேசத்தை தனிமைப்படுத்த முயற்சிகள் எடுக்க வேண்டும், வங்கதேசத்துக்கு ஐநா படையை அனுப்ப வேண்டும் போன்ற விஷயங்களை வலியுறுத்தி தமிழகத்தில் இன்று அனைத்து ஹிந்து இயக்கங்களும் கூட்டாக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்.
ஜனநாயக வழியில் அமைதியான முறையில் நடத்தப்படும் இந்த ஆர்பாட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஹிந்துக்கள் பாதிக்கப்படும் போது அதை எதிர்த்து ஜனநாயக முறையில் போராடக்கூட தமிழகத்தில் ஹிந்துக்களுக்கு உரிமையில்லை என்பது மிகவும் கவலைக்குரியது கண்டனத்திற்கு உரியது. இருப்பினும் வங்கதேச ஹிந்துக்களுக்காக தமிழக மக்கள் தொடர்ந்து போராடுவோம் என கண்டன முழக்கம் எழுப்பினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்
வங்கதேச இந்து உரிமை மீட்புகுழு திருப்பத்தூர் மாவட்டத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆர்எஸ்எஸ் மாநிலத் தலைவர் ஸ்ரீ K.குமாரசாமி ஜி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார், RSS, BJP, இந்து முன்னணி, VHP மற்றும் இந்து இயக்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.