தஞ்சாவூர். நவ.25
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக ஆசிரியர் நியமன முறைகேடு புகாருக்கு ஆதாரம் இல்லை என்றால் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் கூடல் இருநாள் மாநாட்டின் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
தமிழ் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் நியமன முறைகேடு புகாருக்கு எந்த ஒரு ஆதாரம் இதுவரை காணப்படவில்லை:
இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதால் இதுகுறித்து சொல்வது தவறு விசாரணை குழுவின் முடிவு வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப் படும்.
தஞ்சாவூர் சோழர் அருங்காட்சிய கத்திற்கான மாதிரி வடிவத்துக்கு தமிழக முதல்வர் இறுதி செய்து ள்ளார். அதற்குரிய திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு ஒப்பந்த புள்ளி கோரி விரைவில் பணிகள் தொடக்கப்படும்.
தமிழுக்காக உயிர் நீத்தவர்கள் உடமைகளை இழந்த தியாகிகளை சான்றோர்களுக்கு மரியாதை செய்யக்கூடிய வகையில் முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் ஜனவரி 25ஆம் தேதி கடைபிடிக்கப்படும் வீரவணக்க நாளை அரசு விழாவாக நடத்தும் வகையில் தமிழ் மொழி தியாகிகளில் நாளாக கடைபிடிக்க ப்பட உள்ளது .இது வருகிற ஜனவரி (2025 )லிருந்து கடைபிடிக்கப்படும் என்றார் அமைச்சர்.
முன்னதாக தமிழ் பல்கலைக் கழகத்தில் அனைத்திந்திய தமிழ் சங்க பேரவை, பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தமிழ்கூடல் 2024 என்ற மாநாட்டை தொடங்கி வைத்த அவர் பேசியதாவது..
நம்முடைய தாய் மொழியை விட்டு இளைஞர் சமுதாயத்தினர் விலகி இருக்கிறார்களோ என்ற எண்ணம் உருவாகியிருக்கிறது
இதையெல்லாம் தமிழ் சான்றோர் கள், தமிழ் சங்கங்களின் சேவை மூலம் இளைய சமுதாயத்தை தாய் மொழி தமிழ் பற்றை குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது .எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற சூழ்நிலை உருவாக வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்றார் அவர்
விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் பேசியதாவது:
மொழியையே தன் பெயராக வைத்துள்ள இனம் நம் தமிழ் இனம் மட்டுமே தமிழன் என்று சொன்னால் சுயமரியாதையும் பெருமையும் தகுதியும் ஆளுகின்ற தன்மையும் உண்டு. தமிழை வளர்த்த அறிஞர்கள், கலைஞர்கள் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்றார் அவர்
விழாவிற்கு பொறுப்புத் துணை வேந்தர் கா சங்கர் தலைமை வகித்தார் .முன்னாள் துணைவேந்தர் சி சுப்பிரமணியம் கருத்துரையாற்றினார் அனைத்திந்திய தமிழ்ச் சங்க பேரவை பொதுச்செயலாளர் முத்துராமன் நோக்கவுரையாற் றினார்
விழாவில் தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு) டி கே ஜி நிலமேகம் (தஞ்சாவூர்) மேயர் சண். ராமநாதன் மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, அனைத்திந்திய தமிழ்ச் சங்க பேரவை ஆலோசகர் ஞானசேகரன் ,டில்லி தமிழ் சங்க பொது செயலர் முகுந்தன் கொல்கத்தா பாரதி தமிழ் சங்கத் தலைவர் நக்கீரர் ,ஹைதராபாத் மாநகர் தமிழ் சங்கம் கிருபானந் தன், தலைநகர் தமிழ்ச்சங்கம் கணபதி, கண்ணதாசன் கலை இலக்கிய சங்கம் பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
முன்னதாக அனைத்திந்திய தமிழ்ச் சங்க பேரவை தலைவர் துரைசாமி அனைவரையும் வரவேற்றார் .நிறைவாக பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பு தியாகராஜன் நன்றி கூறினார்.