ராமநாதபுரம், மே 8-
ராமநாதபுரத்தில் தனது மனைவியின் பூர்வீக சொத்திற்கு தனி பட்டா கோரி விண்ணப்பித்த மனுவை உயரதிகாரிகளுக்கு பரிந்துரைத்த ஆட்டோ டிரைவரிடம் ரூ. 3,500 லஞ்சம் வாங்கிய நில அளவையர் போலீசில் சிக்கினார்.
ராமநாதபுரம் ஓம் சக்தி நகரைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 53. ஆட்டோ டிரைவரான இவர் தனது மனைவியின் பூர்வீக சொத்தை பாகம் பிரித்து தனி பட்டா கோரி இணைய தளத்தில் விண்ணப்பித்தார். இது தொடர்பாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் நில அளவையர் சிவாவை அணுகினார். விண்ணப்பத்தை உயரதிகாரிகளுக்கு பரிந்துரைக்க ரூ.3,500 ஐ திருநாவுக்கரசிடம் இருந்து நேற்று மாலை சிவா வாங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீசார் சிவாவை கையும், களவுமாக பிடித்தார். இது தொடர்பாக சிவாவிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.



