கன்னியாகுமரி, நவ. 13:
குமரி மாவட்டம் மருங்கூர் பேரூராட்சிக்குட்பட்ட குமாரபுரம் தோப்பூர் பகுதியில் நடக்கும் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்தவும், சமூக விரோதிகளை எளிதாக அடையாளம் காணவும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் சார்பாக ருபாய் 7.60 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட மடத்தில் சுமார் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்கள் பொதுமக்கள் சார்பாக பொருத்தப்பட்டது.
இதனை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமையில் தொழில் அதிபர் ஐயப்பன் முன்னிலையில் கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்தார்.
இதில் குமாரபுரம் தோப்பூர் ஊர்வகை தலைவர் சுபாஷ், மருங்கூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில் ஸ்ரீ காரியம் ராமசந்திரன், சுந்தர், ஜென்சன் ரோச் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.