நகர் மன்ற தலைவரிடம் மாஸ்டர் வீவர்ஸ் கோரிக்கை/
சங்கரன்கோவில் விசைத்தறி நெசவாளர்களுக்கு வணிகவரி கட்டிட வரி விதிப்பு விதிக்க க்கூடாது மாஸ்டர் வீவர்ஸ் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி துணைத்தலைவர் கண்ணன் நகராட்சி ஆணையாளர் சபாநாயகம் ஆகியோரிடம் மாஸ்டர் வீவர்ஸ் சங்கத் தலைவர் என் கே எஸ் டி சுப்பிரமணியன் துணைத் தலைவர் பிஜிபி ராமநாதன் செயலாளர் டி எஸ் ஏசுப்பிரமணியன் பொருளாளர் முத்து சங்கரநாராயணன் ஆகியோர் கொண்ட குழுவினர் கோரிக்கை மனு அளித்தனர் கோரிக்கையில் சங்கரன்கோவில் 5000க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழில் கூடங்கள் உள்ளன இதில் குடிசைத் தொழிலாக வீடுகளில் குடியிருந்து கொண்டு வீட்டில் குடியிருந்து உண்டு உறைவிடம் தொழில் கூடமாக கொண்டு அரசு வழங்கும் இலவச மின்சாரத்தில் ஒரு விசைத்தறி இரண்டு விசைத்தறி வைத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடிசை தொழில் போன்று ஜாப் ஒர்க் செய்து வாழ்க்கை பிழைப்பை நடத்தி வருகின்றனர் கடந்த 2022 ல் தொழில் கட்டிடங்களுக்கு 100% வீட்டு வரி ரூபாய் 600 கட்டிய வர்களுக்கு 2.5 சதவிகிதமும் 1200 வரி கட்டியவர்களுக்கு 50% வரி உயர்வும் தற்போது 1200க்கும் மேல் வரி செலுத்தியவர்களுக்கு 75% வரி உயர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது தற்போது ஆறு சதவிகிதம் வரி உயர்வு அதிகரித்துள்ளது ஆகவே நகராட்சி நிர்வாகம் வணிக வரிவிதிப்பு கட்டிட வரிவிதிப்பு விதிப்பதை தவிர்க்கும் படி யும் விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் வரி விதிக்க கூடாது என கோரிக்கை மனு மாஸ்டர் வீவர்ஸ்சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர் மனு அளிக்கும் நிகழ்வில் சங்க நிர்வாகிகள் குப்பையாண்டி சுப்பிரமணியன் கார்த்திக் சங்கர் சுப்பிரமணி முத்தையா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



