தேனி மாவட்டம், நவம்-10 தேனி மாவட்டம், உத்தமபாளையம் பைபாஸ் அருகில் புதன்கிழமை அன்று நடைபெறும் வாரச்சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில் சமீப காலமாக காவலர்கள் ரோந்து பணி மற்றும் பாதுகாப்பு பணியில் இல்லாததால் வழிப்பறி சம்பவங்களும், பெண்கள் மீதான சீண்டல்களும் அதிகரித்து வருகின்றது.
கடந்த 16-10-2024 புதன் கிழமை உத்தமபாளையம் சேர்ந்த அனீஸ் பாத்திமா என்பவரிடம் மொபைல் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து உத்தமபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் வார சந்தைக்கு வரும் பெண்களிடம் ஆபாசமாகவும், பாலியல் சீண்டல்களிலும் சமூகவிரோதிகள் ஈடுபடுகின்றனர்.
பொதுமக்கள் நலன் கருதி உத்தமபாளையம் வாரச்சந்தையில் மாலை வேலைகளில் காவலர்களை நியமித்தும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.செங்குட்டுவேலன் அவர்களிடம் உத்தமபாளையம் நகர மனிதநேய மக்கள் சார்பாக கோரிக்கை மனு 9-11-2024 அன்று அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி மாவட்ட பொருளாளர் ஹபிபுல்லாஹ், மாவட்ட துணைச் செயலாளர் சிராஜ்தீன், மாவட்ட மருத்துவஅணி செயலாளர் யூசுப் அன்சாரி உத்தமபாளையம் நகர தலைவர் முகமது அசாருதீன் நகர துணை செயலாளர் சையது ஆமீன் ஆகியோர் மனு அளித்தனர்.
உத்தமபாளையத்தில் நடைபெறும் வாரசந்தையின் போது பாதுகாப்பு பணிக்கு காவலர்கள் ஏற்பாடு செய்வதாகவும், சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் உறுதி அளித்தார்.
கோரிக்கை மனுவை கனிவுடன் பரிசீலித்த மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்தனர்