கன்னியாகுமரி அக் 27
கன்னியாகுமரி பேருந்து நிலையத்தில் சீரமைக்க வலியுறித்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ,கன்னியாகுமரி பேருந்து நிலையத்தை படகுதுறையாக மாறி வருகிறது.பேருந்து நிலையத்தில் உள்ள கட்டிடங்கள் மிகவும் அபாயகரமாக உள்ளது.
பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.பேருந்து நிலையம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.கூடுதல் பேருந்து இயக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையிட்டு பேருந்து நிலையத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில் நிர்வாகிகள் சிவதாணு, மணிகண்டன், வெனீஸ், ராக்சினி, திலகா, புனிதா உட்பட பலர் பங்கேற்றனர்.



