கீழக்கரை புது கிழக்கு 21 குச்சி பகுதியில் இறகுகள் ஒடிந்த நிலையில் ஒரு மயில் பறக்க முடியாமல் இருந்தது. இதை கண்ட சமூக ஆர்வலர் அபுபக்கர் சித்தீக் இது சம்பந்தமாக வாட்ஸ் அப் தளத்தில் பதிவு செய்து இருந்தார். இந்த தகவல் கீழக்கரை வனத்துறையினர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக தேசிய பறவையான மயிலை மீட்ட வனத்துறையினர் சிகிச்சைக்காக மயிலை பிடித்து சென்றனர்.



