திண்டுக்கல் மாவட்டம், மேற்கு மரியநாதபுரத்தில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் நண்பர்கள் குழு இணைந்து கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சோ.பூங்கோதை தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளார் Ln.இ.தனராஜ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 5-வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. காந்திகிராமம் பல்கலைக்கழக விரிவுரையாளர நிர்மலா தேவி, திண்டுக்கல் மாநகராட்சி மருத்துவமனை சித்த மருத்துவர் Dr.அரவிந்தன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தாய்மாறுகளுக்கான சிறப்பு ஆலோசனைகள் வழங்கினார்கள்.இராமூர்த்தி, சரவணன் களப்பணிகள் மேற்கொண்டனர். ஊட்டச்சத்து மிக்க குழந்தைகளுக்கு இரட்டை வழக்கறிஞர் யூஜின் விவேக் குமார் பரிசுகள் வழங்கினார். குழந்தைகள் திட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராகவேந்திரன் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன் அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்
மரியாநாதபுரத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics