சென்னை, அக்டோபர் 10 –
காவேரி மருத்துவமனை குழுமத்தின் சென்னை ஆழ்வார்பேட்டை மருத்துவமனை ஜாயிண்ட் கமிஷன் இன்டர்நேஷனல் (JCI) 8-வது பதிப்பு அங்கீகாரம் பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக 2025 ஜனவரி மாதத்தில் இக்குழுமத்தின் வடபழனி மருத்துவமனை இதே அங்கீகாரத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரட்டை அங்கீகாரத்தின் மூலம், இந்தியாவில் ஒன்றுக்கு மேல் ஜே.சி.ஐ (JCI) அங்கீகாரத்தைப் பெற்ற பல மையங்களைக் கொண்ட வெகு சில மருத்துவமனைகளின் பட்டியலில் காவேரி இணைந்திருக்கிறது.
இதன் மூலமாக, உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சேவைக்கான ஒரு நம்பகமான மையம் என்ற அந்தஸ்தை காவேரி மருத்துவமனை குழுமம் மீண்டும் உறுதி செய்துள்ளது.
இச்சாதனை குறித்து, காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: “இந்த சாதனை சென்னைக்கு மீண்டும் பெருமை சேர்க்கும் தருணம். காவேரி ஆழ்வார்பேட்டை மற்றும் வடபழனி ஆகியவற்றால் பெற்ற இரட்டை ஜே.சி.ஐ அங்கீகாரம், உலகளாவிய சுகாதார மையமாக சென்னையின் அந்தஸ்தைப் பிரதிபலிக்கிறது.
சிகிச்சை பெறுபவர் பாதுகாப்பு, தொற்று கட்டுப்பாடு, மருத்துவ நிர்வாகம் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கான உலகளாவிய தர நிலைப்படுத்தப்பட்ட அமைப்புகளை கண்காணித்து ஜே.சி.ஐ அங்கீகாரத்தை உறுதி செய்கிறது. சேர்க்கை முதல் வெளியேற்றம் வரை – பராமரிப்பின் ஒவ்வொரு படியும் – குறைவான மருத்துவ பிழைகள், விரைவான மீட்பு மற்றும் சிகிச்சை பெறுபவர் திருப்திக்கு வழிவகுக்கும் சான்றுகள் சார்ந்த நெறிமுறைகளைப் பின்பற்றுகிறது.
ஆசியாவின் மருத்துவத் தலைநகரம் என்று நீண்ட காலமாக அங்கீகரிக்கப்பட்ட சென்னை, உலகளாவிய சிகிச்சை பராமரிப்புத் தரங்களைத் தொடர்ந்து பின்பற்றுவதோடு, அவைகளையும் மிஞ்சி சிறந்து விளங்குகிறது என்ற உத்திரவாதத்தை சர்வதேச நோயாளிகளுக்கும் இந்த அங்கீகாரம் வழங்குகிறது . தரநிலைக்கான இரட்டை அங்கீகாரத்தை காவேரி குழுமம் பெற்றிருப்பதன் மூலம் சர்வதேசம் மற்றும் இந்திய மக்களின் நம்பிக்கைக்குரிய தேர்வாகவும் திகழும் என்று தெரிவித்தார்.



