ஈரோடு, அக் 23
ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை சார்பில் ஆர்ப்பாட்டம் மாவட்ட அமைப்பாளர் தன விஜ யன் தலைமையில் நடந்தது மாநகர துணை அமைப்பாளர் ஆதிவள்ளுவன், மாவட்ட துணை அமைப்பாளர் நித்தியா னந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஈரோடு திருப்பூர் மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன், துணைச்செயலாளர் ஜாபர் அலி மாநில கருத்தியல் பரப்பு துணைச்செயலாளர் செல்ல பாண்டியன் பாசறை மாநில செயலாளர் தமிழினி
ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் எஸ்சி எஸ்டிக்கான இடஒதுக்கீட்டை 24 சதவீதமாக உயர்த்த வேண்டும் பஞ்சமி நிலங்களை அடையாளம் கண்டு தகுதியானவர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும் எஸ்சி. எஸ்டி மக்களுக்கு எதிராக நடந்து வரும் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணவ கொலைகளை தடுக்க சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சி ர்வாகிகள் அரசாங்கம், ரஞ்சித் அரங்கமுதல் வன், சித்ரா, சண்முகம் உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.



