நாளையே தேர்தல் வைத்தால் அதிமுக 190 இடங்களில் வெற்றி பெறும் உளவு பிரிவு ரிப்போர்ட்!
மாவட்ட செயலாளர் முனியசாமி தகவல்
ராமநாதபுரம், அக்.19-
தமிழகத்தில் நாளையே சட்டமன்ற தேர்தல் வைத்தால் தற்போது உள்ள சூழலில் அதிமுக 190 இடங்களை கைப்பற்றும் என்று உளவு பிரிவு அறிக்கை வழங்கி உள்ளது, என்று, அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி பேசினார்.
அதிமுக மண்டபம் கிழக்கு ஒன்றியம் மற்றும் மண்டபம் பேரூர் கழகம் சார்பில்
செயல் வீரர் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் முனியசாமி தலைமையில் மண்டபம் கிழக்கு ஒன்றியம் ஒன்றிய கழக செயலாளர் ஜானகிராமன் மற்றும்
மண்டபம் பேரூர் கழகச் செயலாளர்
சீமான் மரைக்காயர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு முன்னதாக அதிமுக 53வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் முனியசாமி பேசும் போது:
உளவு பிரிவு கூறி விட்டது நாளைய தேர்தல் வந்தால் 190 தொகுதி அதிமுக பிடிக்கும்.
எடப்பாடி யார் ஆட்சிக்கு வந்தால்தான் மக்கள் நிம்மதியாக இருக்க முடியும்.
இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக ஆக இருந்தால் தான் நாம் கேட்டது உடனே கிடைக்கும் பயன் பெற முடியும்.
மண்டபம் ஒன்றிய கிளை கழகம்
அதிமுக கோட்டை.
நாடுளுமன்ற தேர்தல் வேறு.
மத்தியில் ஆளுவது யார் என்று பார்த்து ஓட்டு போட்டனர். ஆனால் தமிழகத்தில் எடப்பாடியார் தான் ஆள் வேண்டும் என்று முடிவு செய்து விட்டனர். மக்கள்
இரண்டு கட்சிகளை மட்டுமே ஆதரித்து வருகின்றனர். ஒன்று அதிமுக மற்றொன்று திமுக
தற்போது திமுக இனி வர வாய்ப்பு இல்லை என்று உறுதி செய்து விட்டனர்.
அதிமுக தான் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று உள்ளது.
கிளை கழகம் ஆணி வேர் நீங்கள் நன்றாக பணியாற்றினால் வெற்றி 100 சதவீதம் உறுதி.
2026 மண்டபம் கிழக்கு அதிகமான ஓட்டு வாங்கி தந்த பெருமை பெற வேண்டும், என்றார்.
தலைமை கழகப் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் கழக வர்த்தக அணி செயலாளர் செல்ல பாண்டியன் அவர்கள் எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர்
ஆர் ஜி ரத்தினம் மாவட்ட இணைச் செயலாளர்
கவிதா சசிகுமார் மாவட்ட அம்மா பேரவை செயலாளர்
சேது பாலசிங்கம், மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர்
எம் எஸ் அருள் , மாவட்ட மருத்துவ அணி செயலாளர்
டாக்டர் இளையராஜா இவர்களுடன் மாவட்ட பிற அணி பொறுப்பாளர்கள், மண்டபம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், கழகத் தொண்டர்கள் செயல் வீரர் மற்றும் வீராங்கனைகள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.