நாகர்கோவில் அக் 11
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட தபால் அலுவலகங்களில் 3 வயதிற்கு கீழ் உள்ள சிறு குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்குகளுக்கும் சிறப்பு சான்றிதழ் வழங்கப்படுவதாக
கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்து வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட தபால் அலுவலகங்களில் 3 வயதிற்கு கீழ் உள்ள சிறு குழந்தைகள் அனைவருக்கும் தொடங்கப்படும் எல்லாவித சேமிப்பு கணக்குகளுக்கும் சிறப்பு சான்றிதழ் கொடுக்கப்பட்டு வருகின்றது பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கணக்கு தொடங்கப்படும் தபால் அலுவலகங்கள் மூலமாக தகவல் தெரிவித்து சான்றிதழை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.