நாகர்கோவில் – அக் – 09,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள ரோட்டரி கம்யூனிட்டி மையத்தில் வைத்து அகில இந்திய பி.எஸ். என்.எல் ஓய்வுதிய நலச்சங்க 7-வது மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் ராஜன்பாபு தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாநில உபதலைவர் பாலன் துவக்க உரை நிகழ்த்தினார் , நாகர்கோவில் பி. எஸ். என் .எல். பொது மேலாளர் பிஜு பிரதாப் வாழ்த்துரை வழங்கினர், மாநில செயலாளர் சுந்தர கிருஷ்ணன் சிறப்புரை நிகழ்த்தினார்,
நடைபெற்ற மாநாட்டு நிகழ்வில் ஆண்டறிக்கை, ஒப்புதல், வரவு, செலவு கணக்கு – ஒப்புதல், புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் பல்வேறு கோரிக்கை தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட தலைவர் ராஜன்பாபு நன்றியுரை கூறினார்.
மாவட்ட பொருளாளர் டேவிட், மாவட்ட செயலாளர் செல்லையா உட்பட சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.