நாகர்கோவில் – அக்- 01,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கன்னியாகுமரி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் கடை வைத்து தையல் தொழில் செய்து வரும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மாவட்ட தலைவர் ஜோசப் தலைமையில் தையல் சம்மேளன பொது செயலாளர் ஐடா ஹெலன் , மாவட்ட செயலாளர் சந்திரகலா, சிஐடியு மாவட்ட செயலாளர் தங்கமோகனன் , மற்றும் பேரின்ப தாஸ், ஜாண்பாக்கிய சிங், கணேசன், பிராஞ்சிஸ் சேவியர், சிவசுப்பிர மணியன், சகாய செல்வன், செல்வகுமார், ஜோ கலந்து கொண்டு அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
மாநிலம் முழுவதும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தையல் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்காக சுயமாக தையல் கடை வைத்து தொழில் செய்து வருகின்றனர் இவர்களின் வாழ்நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது ஒரு சில காலங்களில் மட்டுமே தையல் கடைகளில் துணி துவைத்து வாங்கி கொடுத்துகின்றனர் எனினும் பல காலங்களில் இவர்களுக்கு வேலை என்பதை கேள்விக்குறியாகவே உள்ளது இந்நிலையில் தான் அரசும் இவர்கள் மேல் பல சுமைகளை திணிப்பதாகவும் இதனால் தையல் தொழில் மீது சிறிது நம்பிக்கை கொண்டிருந்த தொழிலாளர்களும் நம்பிக்கை இழந்துள்ளனர். மேலும் தையல் தொழில் செய்யும் தொழிலாளர்கள் தையல் கலையை பல மாதங்கள் பயிற்சி பெற்று முறையாக உடைகளை தைத்துக் கொடுத்து தையல் தொழிலாளர்களாக ஆண் பெண் இருபாலரும் கடை வைத்து சுய தொழில் செய்து வருகிறார்கள்.
ஏழை தையல் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கின்ற வகையில் ஒன்றிய மாநில அரசு தையல் தொழிலுக்கு தேவையான மூலப்பொருள்களின் வரிகள் மின்சார கட்டண உயர்வு ஜிஎஸ்டி உள்ளிட்ட பலவிதமான வரிகள் மற்றும் கடை வாடகை பராமரிப்பு செலவு வாழ்க்கைக்கு தேவையான இதர பொருள்களின் விலை உயர்வு காரணங்களாலும் தையல் தொழிலாளர்கள் தொழில் நடத்துவதற்கு வழி இல்லாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகி பொருளாதார வளர்ச்சியும் மிகவும் பின்தங்கிய நிலையை இருப்பதாகவும் இது தொழிலாளர்களின் சரி பாதிக்கு மேல் பெண்கள் ஆவார்.
எனவே எங்களது பின்வரும் கோரிக்கைகளாவது தையல் கடைகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கிடவும், சுய தொழிலாக தையல் தொழிலில் இருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு மூலப் பொருள்களுக்கான ஜிஎஸ்டி உள்ளிட்ட அனைத்து விதமான வரிகளையும் கைவிடக் கோரியும், புதிய எலக்ட்ரானிக் தையல் மிஷின்கள் வாங்குவதற்கு மற்றும் தையல் தொழிலையும் தொழிலாளர்களையும் பாதுகாக்க வங்கிகள் மூலம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கிடவும், தனியார் பள்ளிகளில் பள்ளி சீருடைகளை தாங்களே கைது கொடுப்பதை கைவிட கேட்டும், லைசென்ஸ் எடுக்க வற்புறுத்தக் கூடாது என்றும் தொழில் வரி கட்ட வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது என்றும், ஒன்றிய மாநில அரசுகள் மேல் காணும் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர்கள் அளித்த மனுல் கூறப்பட்டுள்ளது.