செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமலை வையாவூரில் தென்திருப்பதி எனும் அருள்மிகு அலமேலு மங்கை தாயார் சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் உள்ளது இத்திருக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை ஒட்டி சிறப்பு அலங்காரத்துடன் மூலவரும் ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் உற்சவரும் காட்சியளித்தனர் காலையிலிருந்து நீண்ட வரிசையில் பிரசன்னா வெங்கடேச பெருமாளையும் தாயாரையும் தரிசித்தனர் மேலும் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் மற்றும் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் கணேசன் மற்றும் பொதுமக்கள் முக்கிய பிரமுகர்கள் சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது இவர்களுடன் கோயில் நிர்வாக அலுவலர் மேகவண்ணன் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் வேலு நாயக்கர் மற்றும் திருக்கோயில் நிர்வாக உதவியாளர் உடன் இருந்தனர்



