தேனி செப் 29:
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சியில் ரூபாய் 40 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது தாமரைக் குளம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன பேரூராட்சி பகுதி தற்போது விரிவடைந்து கொண்டே செல்வதாலும் மக்கள் தொகை பெருகத்தாலும் சமுதாய கூடம் அவசியம் இதன் படி பேரூராட்சி 6 ஆவது வார்டு அம்பேத்கார் காலனியில் புதிய சமுதாயக்கூடம் கட்டுவதற்கு பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை அதன் தலைவர் ச. பால்பாண்டி தலைமையிலும் செயல் அலுவலர் ஆளவந்தார் முன்னிலையிலும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ். சரவணக்குமார் பூமி பூஜையை துவக்கி வைத்து பணிகளை துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் தென்கரைப் பேரூராட்சி மன்ற தலைவர் வி. நாகராஜ் பேரூர் திமுக செயலாளர் கருத்தராசு பேரூராட்சி பணி நியமன குழு தலைவர் பாலாமணி பழனி முருகன் பேரூர் இளைஞர் அணி செயலாளர் பொன் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர் தாமரை குளம் பேரூராட்சி இளநிலை உதவியாளர் பாத்திமா நன்றி கூறினார்



