தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் ஜமீன் குறும்பலாப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாணவ மாணவியர்களுக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பழனி நாடார் மற்றும் தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் சீனித்துரை, ஒன்றிய குழு தலைவர் காவேரி சீனித்துரை மற்றும் காங்கிரஸ் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



