By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருச்சியில் இரு வேறு விபத்துகளில் கல்லூரி மாணவர், குழந்தை பலி: கல்லூரி திறக்கும் முதல் நாள், மாணவனுக்கு இறுதி நாளாக மாறிய துயரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருச்சியில் இரு வேறு விபத்துகளில் கல்லூரி மாணவர், குழந்தை பலி: கல்லூரி திறக்கும் முதல் நாள், மாணவனுக்கு இறுதி நாளாக மாறிய துயரம்
தமிழ்நாடுதிருச்சி

திருச்சியில் இரு வேறு விபத்துகளில் கல்லூரி மாணவர், குழந்தை பலி: கல்லூரி திறக்கும் முதல் நாள், மாணவனுக்கு இறுதி நாளாக மாறிய துயரம்

Last updated: July 20, 2026 6:20 pm
July 20, 2026
2 Views
Share
SHARE

திருச்சி, ஜூலை 20 –

திருச்சி திருவெறும்பூர் காந்தி நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் குத்தூஸ். இவரது மகன் அர்ஷீத் (21). இதேபோன்று காந்திநகர் ஆறாவது தெரு பகுதியை சேர்ந்தவர் மார்க்கோ. இவரது மகன் பிரடி (21). இருவரும் திருச்சியை அடுத்த துறையூர் தனியார் பொறியியல் கல்லூரியில், இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார்கள்.

இதையடுத்து இருவரும் கல்லூரி திறக்கும் முதல் நாளான இன்று இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு புறப்பட்டனர். அப்பொழுது இரு சக்கர வாகனத்தை பிரடி ஓட்டினார், பின் சீட்டில் அர்ஷீத் அமர்ந்திருந்தார். இவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், திருவெறும்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அரியமங்கலம் எஸ்.ஐ.டி மைதானம் எதிரே, பின்னால் வந்த ஆமினி பேருந்து இவர்களை முந்திச் செல்ல முயன்றது. அதே நேரத்தில், எதிர்புறம் ஒருவழிப்பாதையில் ஆட்டோ ஒன்றும் வந்துள்ளது.

இவற்றுக்கு இடையே நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே அர்ஷீத் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரது நண்பர், திருச்சி அரசு பொது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போக்குவரத்து தெற்குப் புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி திறக்கும் முதல் நாள், வாழ்வின் இறுதி நாளாக மாறிய துயரம் இறந்த மாணவனின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் திருச்சி பொன்மலைப்பட்டி அடைக்கல மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் காணிக்கை ராஜ். இவர் அந்தப் பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் வெளியூர் செல்வதற்காக தனது வீட்டிலிருந்து காரை வெளியே எடுத்து அந்த பகுதியில் உள்ள அடைக்கல மாதா கோவில் கிறிஸ்தவ ஆலயம் முன்பு நிறுத்த எடுத்து சென்றார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் ரூபன் என்பவரின் மகன் விஜோ ஜாய் (3) என்ற குழந்தை வீட்டில் இருந்து வேகமாக ஓடி வந்து சாலை அருகே உள்ள அடைக்கல மாதா கோவிலுக்கு சென்றார். குழந்தை சென்ற சில நிமிடங்களுக்கு பிறகு தொடர்ந்து அவரது பாட்டியும் வேகமாக சென்றார். அப்பொழுது அங்கு கார் நிறுத்த சென்ற காணிக்கைராஜ் காரை பின்னோக்கி இயக்கியபோது திடீரென்று எதிர்பாராத விதமாக குழந்தை விஜோ ஜாய் மீது மோதியது.

இந்த விபத்தில் காரின் பம்பரில் மோதி சாலையின் கீழே விழுந்ததில் குழந்தை விஜோ ஜாய் தலையில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் காணிக்கைராஜ் மற்றும் குழந்தையின் பாட்டி, பெற்றோர், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக குழந்தை விஜோஜாய்யை அதே காரில் ஏற்றிக்கொண்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

இந்த விபத்து சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் இன்று காலை ஒரே நேரத்தில் கல்லூரி மாணவர் ஒருவரும் குழந்தை ஒருவரும் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

முதலமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி தஞ்சாவூரில் மருத்துவ முகாம்: தவெக சார்பில் நடந்தது
முதலமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி த.வெ.க சார்பில் சூளகிரி மேற்கு ஒன்றியம் சார்பாக யோகா பயிற்சி முகாம் நடந்தது
முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
தென்காசியில் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம்
நாகர்கோவில் மாநகராட்சி குண்டும் குழியுமான சாலைகளை உடனே செப்பனிட வேண்டும்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) கூட்டத்தில் தீர்மானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு கருத்தரங்கு

December 31, 2024
118 Views
சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் அம்புச்சாற்று நிகழ்ச்சி
அரசு பள்ளி சுற்று சுவரில் தனியார் நிறுவன விளம்பரங்கள்
மாவட்ட ஆட்சியர் உத்தரவை போலியாக தயாரித்து நூதன மோசடி
மருத்துவரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி; மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி அலுவலகத்தில் தந்தை புகார் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account