புதுக்கடை, ஜூலை 27 –
புதுக்கடை அருகே உள்ள முஞ்சிறை பகுதியை சேர்ந்தவர் எட்வின் கிளாடிஸ் (40). இவரது பெரியம்மா சரஸ்வதி என்பவரது வீட்டில் வாடகைக்கு அதே பகுதியை பகுதியைச் சேர்ந்த தினேஷ் (41) என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் வசித்து வந்த வீட்டின் கண்ணாடிகளை உடைத்து தகராறு செய்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தினேஷ் மற்றும் அவரது நண்பர் ரமேஷ் (44) ஆகியோர் வேப்பமூடு முத்தாரம்மன் கோவில் அருகில் இருந்தனர். அப்போது அங்கு வந்த எட்வின் கிளாடிஸ் தனது பெரியம்மா வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை சேதப்படுத்தியது தொடர்பாக தினேஷிடம் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த தினேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் சேர்ந்து வெட்டு கத்தியால் எட்வின் கிளாடிசை வெட்டி உள்ளனர்.
மேலும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிய வருகிறது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் எட்வின் கிளாடிசை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுவரைக்கு புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது போன்று தினேஷ் புதுக்கடை போலீசில் அளித்துள்ள புகாரில் முன்விரோதம் காரணமாக தன்னையும், தனது நண்பர் ரமேஷ் என்பவரையும் எட்வின் கிளாடிஸ் தாக்கி, வெட்டு கத்தியால் வெட்டியதில் படுகாயம் அடைந்து, குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


