மார்த்தாண்டம், செப் 27
குமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள பால விளை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி சதீஷ்குமார் வீட்டில் இருந்தபோது வீட்டுக்குள் புகுந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கம்பியாய் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதை தடுக்க வந்த அவரின் சகோதரிகள் ரீபா, ஷோபா மற்றும் பெற்றோர் உட்பட நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர்.
இது தொடர்பாக ரீபா கலியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புபோலீசார் படந்தாலுமூடு பகுதி சுரேந்திரன் (25) மற்றும் ரமேஷ், சாம், வினோத், பிரசாத் உட்பட மேலும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பாக வழக்கு விசாரணை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி சுந்தரய்யா நேற்று (25- ம் தேதி) தீர்ப்பளித்தார்.
இதில் சுரேந்திரனுக்கு 3 ஆண்டு சிறை, கமேஷ் மற்றும் சாம் ஆகியோருக்கு 2 ஆண்டுகள், வினோத்துக்கு 2 ஆண்டுகள், சுஜி பிரசாத், சுனில் வித்யாதரன் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் என தண்டனை விதித்து உத்தரவிட்டார்.