மதுரை செப் 18
மதுரை சிந்தாமணி சுங்கச்சாவடி அருகே உள்ள ஹானா ஜோசப்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று நோயாளிகளுக்கு
இந்திய அளவில் முதன் முறையாக புதிய தொழில் நுட்பத்துடன் மூளைக் கட்டிகள் அகற்றம் செய்து
டாக்டர்கள்
சாதனை படைத்துள்ளனர்.
அந்த வகையில்
இந்திய அளவில் முதன் முறையாக புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய மூளை அறுவை சிகிச்சை குறித்து ஹானா ஜோசப் மருத்துவமனை தலைவர் மற்றும் முதுநிலை மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை டாக்டர் அருண்குமார் அளித்த பேட்டியில் கூறிய போது
இந்தியாவில் முதன்முறையாக ஒரு மாதத்தில் அனுமதிக்கப்பட்ட மூன்று நோயாளிகளுக்கு எந்தவித பக்க விளைவும் இல்லாமல் மூளை கட்டிகளை அகற்றி அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வந்ததில் எங்கள் மருத்துவமனை பெருமை கொள்கிறது.
மேலும்
மூளை கட்டிகளை அகற்றுவதற்கு பிரைன் லேப் என்ற புதிய மேம்பட்ட தொழில் நுட்பத்தின்
வாயிலாக மூளை கட்டிகளை துல்லியமாக கண்டறிந்து அகற்றப்படுகிறது. அதன் பின்பு நோயாளிக்கு முறையான கதிர் இயக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. எங்களுடைய மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று நோயாளிகளுக்கு இந்த புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மூளைக்கட்டி அறுவை சிகிச்சை நடத்தி சாதனை படைத்துள்ளோம். இந்த அறுவை சிகிச்சையால் நோயாளிகளுக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாமல் மூளைக்கட்டிகள் அகற்றப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சையில் நரம்பியல் நிபுணர்கள், கதிரியக்க நிபுணர்கள், செவிலியர்கள் ஆகியோர் பங்கு மிகவும் முக்கியமானதாகும்
மேலும் இந்த தொழில் நுட்பத்தின் வாயிலாக மூளையின் நரம்பு தண்டுகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை நடத்தப்பட்ட பத்து நாட்களில் நோயாளிகள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர்இதனால் நோயாளிகளுக்கு எவ்வித நரம்பியல் குறைபாடுகளும் ஏற்படுவதில்லைஇவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வின் போது பிரைன் லேப் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த விபாசிங் டாக்டர் அர்த்தநாரீஸ்வரர் பங்கேற்று பிரைன் லேப் குறித்து தெளிவான விளக்கமளித்தார்
இதற்கான ஏற்பாடுகளை மார்க்கெட்டிங் தலைமை அதிகாரி சேகர் சிறப்பாக செய்திருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.



