நாகர்கோவில், ஜூலை 15 –
கல்விக் கடவுள் பெருந்தலைவர் ஐயா காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது “எல்லோருக்கும் கல்வி” என்ற உயரிய இலட்சியத்தைப் போற்றும் வகையில், நாகர்கோவிலில் உள்ள இந்துக் கல்லூரியில் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சுமார் 10 மாணவ, மாணவிகளின் கல்விக் கட்டணத்தை குமரி (கி) மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏற்று செலுத்தப்பட்டது.
இந்துக் கல்லூரி முதல்வர் ஐயப்பன் முன்னிலையில், தமிழக வெற்றிக் கழகம் குமரி (கி) மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் Adv. அ.காமராஜ் கண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட செயலாளர் S.R. மாதவன் அறிவுறுத்தலின்படி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜன் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை நேரடியாகச் செலுத்தினார்.
ஐயா காமராஜரை நினைவுகூர்வது புகழாரம் சூட்டுவதில் அல்ல; அவர் காட்டிய கல்விப் பாதையை செயலால் தொடர்வதில் தான் என்பதை தமிழக வெற்றிக் கழகம் இந்த நிகழ்வின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.



