புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் நீர்பழனி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி தனித்துணை ஆட்சியர் சோபா உள்ளாட்சி அமைப்புகள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.



