தஞ்சாவூர் செப். 2.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு கலந்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது.மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும் போது ,விநாயகர் சிலை அமைப்பாளர், ஒருங்கிணை ப்பாளர்கள் தொடர்புடைய வருவாய் கோட்ட அலுவலரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னர் சிலை வைக்க வேண்டும். களிமண் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே அமைக்க வேண்டும். தீயணைப்புத் துறை, மின் துறை அனுமதி பெற வேண்டும்.
விநாயகர் சிலைகளின் உயரமானது பீடத்துடன் சேர்த்து 10 அடிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஊர்வலத்தின் போது 4 சக்கர வாகனங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும். 3சக்கர வாகன ங்களுக்கு அனுமதி இல்லை, சிலை அமைவிடம், ஊர்வலம் மற்றும் கரைக்கக்கூடிய இடங் களில் பட்டாசுகள் வாண வேடிக் கைகள் வெடிக்க அனுமதி இல்லை.
விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினரால் அனுமதிக்கப் பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு, சட்ட- ஒழுங்கிற்கு பாதிப்பு இல்லாத வகையில் கொண்டாட வேண்டும். என்றார்.
கூட்டத்தில் வருவாய் கோட்ட ஆட்சியர்கள் இலக்கியா (தஞ்சாவூர் ஜெயஸ்ரீ (பட்டுக்கோட்டை) மாநகராட்சி ஆணையர் கண்ணன் பேரூராட்சிகள் துணை இயக்குனர் மாஹின் அபுபக்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.