தருமபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் மக்கள் செல்வர் திரு டி.டி.வி.தினகரன் கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டால் மின் கட்டண உயர்வு, சொத்து வரி பல மடங்கு உயர்வு, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டண உயர்வு, பால் மற்றும் பால் பொருட்கள் விலை உயர்வு, பத்திரப்பதிவு பல மடங்கு உயர்வு இது போன்ற பல வரிகளை உயர்த்திய திராவிட முன்னேற்றக் கழக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் டி. முத்துசாமி மாவட்ட கழக அவை தலைவர் தலைமையில் தர்மபுரியில் நடைபெற்றது. வரவேற்புரை எஸ். பார்த்திபன் நகர கழகச் செயலாளர், கண்டன பேருரை டி.கே. ராஜேந்திரன் மாவட்ட கழகச் செயலாளர், ஆர்.ஆர். முருகன் கழக அமைப்புச் செயலாளர், ஆர். பாலு, கே. மணிமேகலன் மாவட்ட பொருளாளர், ஆர். கௌதமி மாவட்ட கழக இ னைசெயலாளர், எஸ். சங்கீதா மாவட்ட கழக இணை செயலாளர், டி .எம். கோகுல்ராஜ், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, நன்றியுரை போலீஸ் எம். கிருஷ்ணன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.



