[9:26 am, 16/7/2024] +91 77083 36991: ஈரோடு ஜூலை 16 முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதியில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி எலவமலை அரசு நிதியுதவி பெறும் ஏ.பி.எஸ். பாரதி கல்வி நிலையத்தில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்
இந்த நிகழ்ச்சிக்கு ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கினார்
அப்போது அமைச்சர் முத்துசாமி பேசியதாவது
ஈரோடு மாவட்டத்தில் 1079 பள்ளிகளுக்கு சுமார் 47,000 மாணவ, மாணவியருக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 36 அரசு நிதியுதவி பெறும்
பள்ளிகளில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் 3,055மாணவர்கள் பயன்பெறவுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டம் மற்றும்
2-ம் கட்டம் சேர்த்து 1,115 பள்ளிகளைச் சேர்ந்த 50,055 மாணவ, மாணவியர்கள்
பயன்பெறுகின்றனர்.
[9:26 am, 16/7/2024] +91 77083 36991: வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் தான் முதன்முதலாக இத்திட்டத்தினை கொண்டு வந்துள்ளார்கள். அரசு பள்ளியில் பயிலுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையும் இத்திட்டத்தின் மூலம் உயர்ந்துள்ளது. பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்து உத்தரவிட்டுள்ளார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்
இதன் பிறகு எலவமலை ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்காக 6 பயனாளிகளுக்கு பணி ஆணையினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்,
அந்தியூர் செல்வராஜ் எம் பி மேயர்
நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.