தருமபுரியில் பாரத மாதா மக்கள் சிந்தனை குழு மற்றும் செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் கர்மவீரர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கௌரவ தலைவர்கள் திரு பி. என். குரு ராவ் சமூக சேவகர், திரு சக்திவேல்.தலைமை திரு மா, பிரதீப் குமார் தலைவர் பாரதமாதா மக்கள் சிந்தனை குழு,திரு வ.சௌந்தரராஜன் செயலாளர் பாரத மாதா மக்கள் சிந்தனை குழு, சிறப்பு அழைப்பாளர்கள் தடங்கம் பெ.சுப்ரமணியம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திரு டி. எஸ்.சரவணன் தடகல சங்கத் தலைவர், திரு கோவிந்த், திரு ஆர். நாகராஜன், திரு வ. முல்லைவேந்தன் நகர மன்ற உறுப்பினர், திருமதி சிந்து தீபக், திருமதி பாரதி, திரு பி. சின்னசாமி, நன்றி உரை திரு ந. வினோத் பாரத மத மக்கள் சிந்தனை குழு ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் கர்மவீரர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு பற்றியும் அவரது கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள் குறித்தும் பேசினார்கள். பிறகு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



