நாகர்கோவில் மே 15
இந்தியாவில் பசுவதை தடைச் சட்டத்தை கடந்த 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி முதல் உச்ச நீதிமன்றம் ஆதரவு அளித்து ஊக்கப்படுத்தியது அன்று முதல் இந்த சட்டம் நாடு முழுவதும் அமலில் இருந்து வருகிறது. இதில் பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகளை கொடுமைப்படுத்த கூடாது, கொல்லக் கூடாது என்றும் சட்ட விதிமுறைகளில் இருந்து வருகின்றன.
ஆனால் நாடு முழுவதும் இந்த சட்டங்களை யாரும் பின்பற்றுவதாக தெரியவில்லை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் இருந்து இரண்டு பசுக்கள் மட்டுமே நிற்க்கும் அளவுள்ள மினிவேனில் ஐந்து பசுக்களை ஏற்றி அதன் கால்களை உடைத்து கொண்டு வந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் வண்டியை சிறை பிடித்து வடசேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த பசுக்களை தக்கலை அருகே அழகிய மண்டபத்தில் இறைச்சி கடை நடத்தி வரும் ஒருவரின் கடைக்கு இறைச்சிக்காக இந்த பசுக்களை கொண்டு செல்வதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்துவதற்க்காக பசுக்களை இரண்டு வாகனங்களில் ஏற்றி வடசேரி காவல் நிலையத்திற்க்கு கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.



